search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைக்கோல் படப்பு"

    • விவசாயிக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் ‘தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் பள்ளிவாசல் தெரு வைச்சேர்ந்தவர் ஜலாலு தீன் (வயது50). விவசாயி யான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.

    மாடுகளுக்கு தேவையான வைக்கோல் கட்டுகளை வாங்கி வீட்டின் பின்புறமாக அடுக்கி வைத்துள்ளார்.இந்த நிலையில் சம்பவத் தன்று காலை ஜலாலுதீன் தனது மாடுகளை மேய்ச்ச லுக்காக என்.முக்குளம் பகுதிக்கு அைழத்து சென்றார். அவரது மனைவி சூரத்கனியும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜலாலு தீன் திரும்பி வந்தபோது வீட்டின் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. அங்கு சென்றபோது வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து கொண்டி ருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த ஜலாலுதீன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வைக்கோல் படப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் பலத்த காற்று வீசியதால் வைக்கோல் கட்டுகள் மேலும் வேகமாக எரிந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வ ரன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அதிர்ஷ்டவச மாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    ×